கல்வி, அரசியல் மற்றும் சமூக சேவையில் உன்னத தலைவர்
சேலம் மாவட்டத்தில் ஆத்தூர் அருகே தாண்டவராயபுரம் என்ற குக்கிராமத்தில் பிறந்து, பல கஷ்டங்களையும், வேதனைகளையும் தாண்டி, மூன்றெழுத்தில் பல கல்வி சாம்ராஜ்ஜியங்களை உருவாக்கி உலகம் போற்றும் உன்னத தலைவராய் வலம் வருபவர் தான் இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனத்தலைவர் டாக்டர் பாரிவேந்தர் அவர்கள்.
"கல்வி தாழ் திறந்த கரிகாலனாய் படிப்புத் தந்த பாரி வள்ளலாய்"
ஆசிரியராகப் பணிபுரிந்த காலத்திலேயே தனது கல்வி நிறுவனங்களை அமைக்கத் தொடங்கியவர். ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள தொடக்கப் பள்ளியை 1969 ஆம் ஆண்டு பிளாரன்ஸ் நைட்டிங்கேல் என்ற பெயரிலும் 1981 ஆம் ஆண்டு அதே பள்ளியை அடுத்த நிலையான உயர்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தினார். பின் தன் தாயின் பெயரைக் கொண்டு 1984ஆம் ஆண்டு வள்ளியம்மை பாலிடெக்னிக் கல்லூரியை நிறுவினார். 1985ஆம் ஆண்டு எஸ்.ஆர்.எம். என்ற மகிழ்மதியை எஸ்.ஆர்.எம். என்ற பொறியியல் கல்லூரியிலிருந்து தொடங்கினார். இதன் பின் மருத்துவம், பொறியியல், சட்டக் கல்வி, வேளாண்மை போன்ற எண்ணற்ற துறைகளிலும் கல்லூரி வாசலைத் திறந்து வைத்தவர். பல மாணவர்களின் கல்வியை மேம்படுத்தியவர்.
"கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றை யவை" - வள்ளுவர்
"இல்லை என்பது கல்வி இல்லாமையே, உடையவர் என்பவர் கல்வி உடையவரே.." - பாவேந்தர் பாரதிதாசன்
இத்தகைய சிறப்புமிக்க கல்வியை அளித்து கொண்டிருப்பது தான் நம் SRM பல்கலைக்கழகம். இந்த மாபெரும் பல்கலைக்கழகத்தை உருவாக்கியவர் தான் நம் இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனத்தலைவர் டாக்டர் தா. இரா. பாரிவேந்தர் அவர்கள். தமிழ்நாடு, டெல்லி, ஆந்திரா, சிக்கிம் என்ற பல மாநிலங்களிலும் எஸ். ஆர். எம் பல்கலைக்கழகத்தை நிறுவி கல்விச்சேவையை ஆற்றி வருகிறார். பல நாடுகளில் இருந்து ஆயிர கணக்கில் வருடம் தோறும் சேர்ந்து மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இது போன்ற கல்வியாளரை நிறுவனத்தலைவராக கொண்ட கட்சி இந்திய ஜனநாயகக் கட்சி. தமிழையும், தேசியத்தையும் தனது இரு கண்களாகக் கொண்டு செயல்பட்டு வருபவர் தான் நம் உத்தமத்தலைவர் பாரிவேந்தர் அவர்கள். வருடந்தோறும் ஆயிரக்கணக்கில் ஏழை மாணவர்களுக்கு உயர்கல்வியை இலவசமாக வழங்கி வரும் மாபெரும் வள்ளல் பாரிவேந்தர் அவர்கள்.
கல்வியையும், மருத்துவம் மட்டுமே ஒருவருக்கு இலவசமாக வழங்க வேண்டும் என்ற உயரிய கொள்கை அடிப்படையில் இந்திய ஜனநாயகக் கட்சியை உருவாக்கி வழி நடத்திக் கொண்டு இருக்கின்றார். வருடந்தோறும் பல நூறு மக்கள் பயன்பெறும் வகையில் உன்னதமான இலவச மருத்துவச் சேவையை வழங்கி வருகிறார் பாரிவேந்தர் அவர்கள்.
"முல்லைக்குத் தேர் கொடுத்தவர் சங்ககாலப் பாரி.. முத்தமிழுக்குத் தேர் கொடுப்பவர் நிகழ்கால பாரி நம் பாரிவேந்தர்.."
ஆம், எஸ். ஆர். எம் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப்பேராயம் என்ற அமைப்பை உருவாக்கி சாகித்ய அகாடமி விருதிற்கு இணையாக, அதனை விட அதிக பரிசுத்தொகையாக தமிழ் இலக்கிய, தொழில்நுட்ப விருதுகளை வழங்கி வருகிறார்.
இப்படி முத்தமிழை தமது மூச்சாக எண்ணும் தலைவரால் உருவான கட்சி இந்திய ஜனநாயகக் கட்சி.
மக்களுக்காக, மக்களால், மக்களிடம் இருந்து உருவாகும் ஆட்சி தான் ஜனநாயகம்.
மக்கள் தான் ஆட்சியின் மூலாதாரம்; அவர்கள் தேர்ந்தெடுக்கும் பிரதிநிதிகள் வழியாக அரசாங்கம் நடத்தப்படுகிறது.
ஒவ்வொருவருக்கும் சம உரிமை, சுதந்திரம், சமத்துவம் ஆகியவற்றை வலியுறுத்தும் அரசியல் அமைப்பு தான் ஜனநாயகம்..
அப்படிப்பட்ட ஜனநாயகத்தை காக்க கட்சி பெயரிலேயே ஜனநாயகத்தை வைத்து இந்திய ஜனநாயகக் கட்சியை உருவாக்கி அதில் உயரிய கொள்கையை வகுத்து செயலாற்றி வருபவர் தான் நம் பாரிவேந்தர் அவர்கள்.
பர்மிங்ஹாம் பல்கலைக்கழகம் - கௌரவ டாக்டர் பட்டம் 2019
மக்களுக்காக, மக்களால், மக்களிடமிருந்து உருவான ஆட்சி
மக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட அவரது சிறப்பான சேவைகள்
"நான் மகாத்மா காந்தி அல்ல. ஆனால் என் வாழ்விலும் பல சத்திய சோதனைகள் ஏற்பட்டுள்ளன" என்ற ஐயா பாரிவேந்தரின் கூற்றிற்கு இணங்கச் சிறு வயதிலிருந்து பல்வேறு சோதனைகளைக் கடந்து இன்று பல சாதனைகள் படைத்துக் கொண்டிருக்கும் நம் ஐயா, சாதாரண பச்சமுத்தாகப் பிறந்து இன்று பார்போற்றும் பாரிவேந்தராக உள்ள ஐயாவின் சேவைத்துளிகள் இதோ:
Powered by iPOT Technologies