• IJK தலைவர் டாக்டர் ரவிபச்சமுத்து அவர்களின் கிறிஸ்துமஸ் தின வாழ்த்துச் செய்தி -

    மனித குலத்தின் துயரங்களை ஆற்றவும் – அவர்களின் வாழ்க்கையில் நம்பிக்கை விளக்கினை ஏற்றவும் தேவகுமாரனாய் அவதரித்த ஏசுபெருமான் பிறந்த நாளை, கிறிஸ்துமஸ் விழாவாக உலகமெங்கும் கொண்டாடி வருகின்றனர்.

    “நான் உன்னைவிட்டு விலகுவதும் இல்லை; உன்னைக் கைவிடுவதும் இல்லை” என்று ஆறுதல் கூறி துன்பத்தில் துடித்தோரை அரவணைத்தவர் இயேசுபிரான். “வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்களே, நீங்கள் என்னிடத்தில் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாருதல் தருவேன்” என்று உடைந்த உள்ளங்களுக்கு நம்பிக்கையை விதைத்து, மக்களோடு மக்களாக வாழ்ந்து, மக்களுக்காக தன்னுயிரைக் கொடுத்த மகான்.  

     இயேசுபிரான் போதித்த தியாகம் – மன்னிப்பு – அன்பு - சமாதானம் ஆகியவற்றை மக்கள் அனைவரும் பின்பற்றி சகோதரத்துவத்துடன் ஒற்றுமையாக வாழ வேண்டும். மற்றவர்களின் தவறுகளை மன்னித்து, நாட்டில் அமைதி நிலவவும், போட்டி பொறாமைகள் அகலவும், ஏழைகளின் துயரங்கள் அகலவும், சமூக நல்லிணகத்தைப் பாதுகாக்கவும் இந்நாளில்உறுதியேற்போம் எனக்கூறி,  இந்நன்னாளில் உலகெங்கிலும் வாழும் அனைத்து கிறித்துவ சகோதர – சகோதரிகளுக்கும், இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பில் எனது உளம் கனிந்த கிறிஸ்துமஸ் தின  நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

     

    வாழ்த்துக்களுடன்,

    டாக்டர் ரவிபச்சமுத்து

    தலைவர்

    இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)