• IJK தலைவர் ரவிபச்சமுத்து அவர்கள் விடுத்திருக்கும்- தமிழ் புத்தாண்டு வாழ்த்துச்செய்தி

    தமிழ் புத்தாண்டு வரிசையில் ஸ்ரீபிலவ ஆண்டு நாளை தொடங்குகிறது. பண்பாட்டு – கலாச்சார அடிப்படையில் நீண்ட மரபும், வரலாறும் கொண்டவர்கள் தமிழர்கள். நமது முன்னோர்களின் பாரம்பரியங்களை தொடர்ந்து பேணிக் காப்பாற்ற வேண்டியது நம் கடமையாகும்.

    கொரோனா என்னும் கொடும் நோயினால் நாம் சிக்கியுள்ள இச்சூழலில், துன்பங்களில் இருந்து விலகி – இன்பங்கள் பெருகி, தொழில் துறையிலும் – பொருளாதாரத் துறையிலும் நாட்டை மேம்படுத்துவதற்கு மத்திய – மாநில அரசுகள் முன்வரவேண்டும்.

    அதற்கான நல்ல வாய்ப்பினை நாளை பிறக்கவிருக்கும் இந்த புத்தாண்டு அளிக்க வேண்டுமெனக் கூறி, பிறக்கவுள்ள இந்த புதிய ஆண்டு உங்கள் எல்லோருடைய வாழ்வில் மகிழ்ச்சியையும், செழிப்பையும்  நிறைவாக அள்ளித்தரவேண்டும் என வேண்டி,  அனைவருக்கும் எனது இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

    வாழ்த்துக்களுடன்,

    ரவிபச்சமுத்து

    தலைவர்

    இந்திய ஜனநாயகக் கட்சி (IJK)