• மனித நேயமிக்க சமுதாயத்தை உருவாக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடவேண்டும் - டாக்டர் பாரிவேந்தர் மிலாதுநபி வாழ்த்து

    இறைதூதர் நபிகள் நாயகம் அவர்கள் பிறந்த தினம் மிலாது நபி திருநாளாக உலகெங்குமுள்ள இஸ்லாமியர்களால் கொண்டாடப்படுகின்றது.  தான் வாழ்ந்த காலத்தில், அனைத்து நற்குணங்களின் முழு வடிவமாக திகழ்ந்தவர் அண்ணல் நபிகள் நாயகம் அவர்கள்.  மனிதநேயத்தையும்  வாழும் பண்பாட்டையும் உலகிற்கு போதித்ததோடு தானே அப்போதனைகளை முதலில் கடைபிடித்தவர்.

    அண்ணல் நபிகள் நாயகம் அவர்கள் பிறந்த இந்நன்நாளில் உலகில் அமைதி மற்றும் சகிப்புத்தன்மை நிலவிடவும்,  மனிதநேயமிக்க இந்தியாவை  உருவாக்கவும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடவேண்டும் எனக்கூறிஉலகெங்கும் வாழும் அனைத்து இஸ்லாமிய பெருமக்களுக்கும் எனது உளம்கனிந்த மிலாதுநபி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.