• நாளை திருச்சி மாவட்டம் துறையூரில் கண்டன ஆர்ப்பாட்டம் IJK - வினர் பெருமளவில் கலந்துகொள்ள டாக்டர் பாரிவேந்தர் அழைப்பு

    இந்திய ஜனநாயகக் கட்சியின் திருச்சி வடக்கு மாவட்டம் சார்பில், துறையூர் பேருந்து நிலையம் அருகே அண்ணா சிலை முன்பு,  நாளை (21.11.2018) காலை 11.00 மணிக்கு, மாவட்டத் தலைவர் T.செல்வராஜ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில்,

    Ø  கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத்தொகை உடனே வழங்கவேண்டும்

    Ø  நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2000/- வீதம் வழங்க வேண்டும்

    Ø  பொதுமக்களை மிகவும் பாதிப்படையச் செய்யும் பெட்ரோல் - டீசல் விலையை 
    GST- க்குள் கொண்டு வந்து உடனே குறைக்க வேண்டும்.

    Ø  துறையூர் புறவழிச்சாலையை (ரிங்ரோடு) உடனே அமைக்க வேண்டும்.

    Ø  சுகாதாரமற்ற சின்ன ஏரியை சுத்தம் செய்ய வேண்டும்.

    Ø  துறையூர் நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் 

    என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் தலைவரும் பொதுச்செயலாளருமான பி.ஜெயசீலன், முதன்மை அமைப்புச் செயலாளர் எஸ்.எஸ்.வெங்கடேசன், கொள்கை பரப்புச் செயலாளர் எம்.எஸ்.ராஜேந்திரன் உள்ளிட்ட மாநில – மாவட்ட நிர்வாகிகள் பலரும் கலந்துகொள்ள உள்ளனர்.

    திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த இந்திய ஜனநாயகக் கட்சியின் நிர்வாகிகளும் – உறுப்பினர்களும் –பொதுமக்களும் பெருமளவில் கலந்துகொண்டு இக்கோரிக்கைகள் நிறைவேறவும் – கண்டன ஆர்ப்பாட்டம் வெற்றிபெறவும் ஒத்துழைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.