• நாளை (16.11.2018) திண்டுக்கல் நகரில் கண்டன ஆர்ப்பாட்டம் - IJK - வினர் பெருமளவில் கலந்துகொள்ள டாக்டர் பாரிவேந்தர் அழைப்பு

    இந்திய ஜனநாயகக் கட்சியின் திண்டுக்கல் மாவட்டம் சார்பில், நாகல் நகர் ரவுண்டானா அருகில்,  நாளை (16.11.2018)காலை 10.00 மணிக்கு, மாவட்ட துணைத்தலைவர் எம்.ரகமத்துல்லா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

    Ø  சராசரி மக்களை மிகவும் பாதிப்படையச் செய்யும் பெட்ரோல் - டீசல் விலையை 
    GST- க்குள் கொண்டுவர வேண்டும்

    Ø  கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத்தொகை உடனே வழங்கவேண்டும்

    Ø  திண்டுக்கல் – அனுமந்த நகர் மேம்பாலம், சிலுவத்தூர் ரோடு மேம்பாலம் ஆகிய இரண்டு ரயில்வே மேம்பாலங்களையும் விரைந்து வேலையை முடித்து மக்கள் பயணிக்க உடனே திறக்கவேண்டும்

    Ø  மாநகராட்சி சாலைகளை சீர்ப்படுத்தவேண்டும்

    Ø  திண்டுக்கல் மாவட்டத்தில் டெங்குவைப் புரப்பும் கொசுக்களை ஒழிக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்

    என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் தலைவரும் பொதுச்செயலாளருமான பி.ஜெயசீலன், முதன்மை அமைப்புச் செயலாளர் எஸ்.எஸ்.வெங்கடேசன், கொள்கை பரப்புச் செயலாளர் எம்.எஸ்.ராஜேந்திரன், இளைஞரணி செயலாளர் A.K.T. வரதராஜன் உள்ளிட்ட மாநில – மாவட்ட நிர்வாகிகள் பலரும் கலந்துகொள்ள உள்ளனர்.

    திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த இந்திய ஜனநாயகக் கட்சியின் நிர்வாகிகளும் – உறுப்பினர்களும் –பொதுமக்களும் பெருமளவில் கலந்துகொண்டு இக்கோரிக்கைகள் நிறைவேறவும் – கண்டன ஆர்ப்பாட்டம் வெற்றிபெறவும் ஒத்துழைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.