• நாளை (21.09.2018) பெரம்பலூரில் திருச்சி மண்டல ஒன்றிய – நகர நிர்வாகிகள் கூட்டம் பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்துகொள்ள - டாக்டர் பாரிவேந்தர் அழைப்பு -

    இந்திய ஜனநாயகக் கட்சியின் திருச்சி மண்டலத்திற்குட்பட்ட ஒன்றிய – நகர பொறுப்பாளர்களின் ஆலோசனைக் கூட்டம் நாளை (21.09.2018) பெரம்பலூர் B.B.ரெசிடென்சி – யில் காலை 11.00 மணிக்கு நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில்  கலந்துகொள்ள திருச்சி – பெரம்பலூர் – கரூர் – கடலூர் – விழுப்புரம் – அரியலூர் ஆகிய மாவட்டங்களைச் சார்ந்த ஒன்றிய – நகர – பேரூர் நிர்வாகிகளுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

     

    அழைப்பு அனுப்பப்பட்டுள்ள நிர்வாகிகள் அனைவரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு, தங்கள் பகுதிகளில் கிளை அமைப்புகளை ஏற்படுத்துவது குறித்தும், கட்சியின் வளர்ச்சி குறித்தும் தங்களின் கருத்துக்களை கூறவேண்டுமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.