• இந்திய பண்பாட்டையும் – பாரம்பரியத்தையும் காத்திட நாம் அனைவரும் தொடர்ந்து பாடுபட வேண்டும் – டாக்டர் பாரிவேந்தர் 68-வது குடியரசு தின வாழ்த்து

    இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுஇதில் பல்வேறு ஜாதி – மத – இன – மொழி வேறுபாடுகள் இருந்தாலும் நாம் அனைவரும் இந்தியர்கள்தான் என்ற அசைக்க முடியாத ஒற்றுமை வேண்டும்.

    இமயம் முதல் குமரி வரை பரந்து விரிந்து கிடக்கும் தேசத்தில் அந்நிய சக்தியின் நிழல்கூட தொட அஞ்சும் அளவிற்கு பெரும் திருவிழாவாக ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினவிழா மிகுந்த உற்சாகத்துடனும் ஒற்றுமையுடனும் கொண்டாடி வருகின்றோம்.

    வல்லரசு நாடுகளையே  மிரளவைக்கும் அளவிற்கு அறிவியல் மற்றும் தொழிற்நுட்பத்தில் அசுர வளர்ச்சியடைந்துபல்வேறு வகையான பீரங்கிகள் –கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் – ஒலியைவிட அதிவேகமாக சீறிப்பாயும் பிரமோஸ் ஏவுகணைகள் – பல்வேறு வகையான போர் விமானங்கள் – அதிநவீன தொலைதொடர்பு சாதனங்கள் கொண்ட போர் கப்பல்கள் போன்றவை வளர்ந்து வரும் இந்தியாவில் உள்ளதை கண்டு மற்ற நாடுகள் வியக்கின்றன.

    தேச ஒற்றுமை – இறையாண்மை ஆகியவற்றை பேணி காத்துபல்வேறு துறைகளில் உள்ள ஊழல்களை களைந்திட நாம் பொது மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டும்.

    மேலும்கடந்த கால கசப்புகளை மறந்துவருங்கால இந்தியாவில் வன்முறை  தீவிரவாதங்களை அடியோடு ஒழித்து,  ஜாதி – மத – இன – மொழி வேறுபாடுகளை கலைந்து, பண்பாடு – பாரம்பரியம் – கலாச்சாரம் – மனித நேயம் ஆகியவற்றை வீரியம் குறையாமல் பேணி காத்திடநாம் அனைவரும் இந்தியன் என்ற பெருமையுடன் தொடர்ந்து பாடுபட வேண்டும் எனக்கூறி உலகெங்கும் வாழும் இந்தியர்களுக்குஇந்திய ஜனநாயக கட்சியின் சார்பில் எனது உளங்கனிந்த குடியரசு தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.