• நரிக்குறவர் உள்ளிட்ட பல்வேறு ஒடுக்கப்பட்ட சாதிகளை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்த மத்திய அரசிற்கு டாக்டர் பாரிவேந்தர் பாராட்டு

    தமிழ்நாட்டிலுள்ள நரிக்குறவர் – குருவிக்காரர் – மலையாளிக் கவுண்டர் ஆகிய வகுப்பினரை பழங்குடியினர் (எஸ்.டி) பட்டியலில் சேர்க்க  வகை செய்யும் சட்டதிருத்த மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததை இந்திய ஜனநாயக கட்சி பாராட்டி வரவேற்கின்றது.

    இதன் மூலம் அவர்களுக்கும் பிற வகுப்பினரை போன்ற கல்வி – வேலைவாய்ப்பு  உள்ளிட்ட அனைத்து அடிப்படை உரிமைகளும் கிடைக்க வழிவகை செய்யப்படும் என எதிர்பார்க்கலாம்.

    இதேபோல், தங்களையும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என பல ஆண்டுகளாக போராடி வரும் இருளர் – குரும்பர் இனத்தவரையும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வழிவகை செய்ய வேண்டும் என மத்திய அரசினை வலியுறுத்தி கேட்டுக்கொள்கின்றேன்.