Loading...

நிகழ்வுகள்

 Sep 15, 2025

நமது உத்தமத்தலைவர் டாக்டர் பாரிவேந்தர் ஐயா அவர்களின் ஆணையின்படியும், நமது தலைவர், இளையவேந்தர் ஐயா அவர்களின் வழிகாட்டுதலின்படியும் இன்று(15.09.25) செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், மாவட்ட சட்டமன்ற தொகுதி மற்றும் பாண்டிச்சேரி மாநில சட்டமன்ற தொகுதி வாரியாக பொறுப்பாளர்கள் கூட்டம் மிகச்சிறப்பாக நடைப்பெற்றது. இந்நிகழ்வில் 487 பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கின்றோம். மேலும் இதில் உள்ள 26 தொகுதி மாவட்ட தலைவர்கள் தாங்கள் அழைத்து வந்த நிர்வாகிகளையும், இதுவரை நியமித்துள்ள பொறுப்பாளர்களைப் பற்றியும், மீதமுள்ள பொறுப்பாளர்களை எவ்வளவு காலத்திற்குள் நியமனம் செய்வோம் என்பது பற்றியும் ஐயா அவர்களிடம் எடுத்துரைத்தனர். மேலும் இந்திய ஜனநாயகக் கட்சியின் வலைதளம் குறித்தும், நீங்கள் ஒவ்வொருவரும் புதிதாக உறுப்பினர்களை நேரடியாக வலைதளத்தில் பதிவு செய்து உறுப்பினர் அட்டை பெறும் முறை குறித்தும், இன்னும் ஒரு மாத கால்ததில் அனைத்து சட்டமன்ற தொகுதியிலும் குறைந்தது 500 முதல் 1000 உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று எடுத்துரைக்கப்பட்டது