• நபிகள் நாயகம் போதித்த அன்பையும் – சமாதானத்தையும் அனைவரும் கடைபிடித்து வாழவேண்டும் - ரமலான் திருநாளை முன்னிட்டு டாக்டர் பாரிவேந்தர் வாழ்த்து -

    புனித ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் அனைவரும் நோன்பிருந்து உடலையும் –உள்ளத்தையும் தூய்மைப்படுத்தியும் – எண்ணங்களை ஒருமுகப்படுத்தியும் மனித நேயத்துடன் ஏழைகளுக்கு உதவி செய்வது இறைவனுக்கு செய்யும் சேவைக்கு ஒப்பானதாகும்.

     அண்ணல் நபிகள் நாயகம் உலக மக்களுக்கு போதித்த அன்பு – மனிதநேயம் – அமைதி –சமாதானம் – சமத்துவம் – நல்லொழுக்கம் – பிறருக்கு உதவும் மாண்பு ஆகிய உயரிய நெறிமுறைகளை அனைவரின் உள்ளத்திலும் ஏற்று – அதனை முழுமையாக கடைபிடித்து வாழவேண்டும் எனக்கூறிஇஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த ரமலான் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.