• மனித நேயமிக்க இந்தியாவை உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடவேண்டும் - டாக்டர் பாரிவேந்தர் மிலாதுநபி வாழ்த்து –

    இறைதூதர் நபிகள் நாயகம் அவர்கள் பிறந்த தினம் மிலாது நபி திருநாளாக  உலகெங்குமுள்ள இஸ்லாமியர்களால் கொண்டாடப்படுகின்றதுதான் வாழ்ந்த காலத்தில்,  அனைத்து நற்குணங்களின் முழு வடிவமாக திகழ்ந்தவர் அண்ணல் நபிகள் நாயகம் அவர்கள்.  மனிதநேயத்தையும் – வாழும் பண்பாட்டையும் உலகிற்கு போதித்ததோடு,  தானே அப்போதனைகளை முதலில் கடைபிடித்தர்.

     அண்ணல் நபிகள் நாயகம் அவர்கள் பிறந்த இந்நன்நாளில் உலகில் அமைதி மற்றும் சகிப்புத்தன்மை நிலவிட,  வளர்ந்து வரும் நம் இந்தியத் திருநாட்டில்தீவிரவாதம் – மதவாதம் –சாதியவாதம் போன்றவை ஒழிந்து அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சி பெற்றமனிதநேயமிக்க இந்தியாவை உருவாக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடவேண்டும் எனக்கூறிஉலகெங்கும் வாழும் அனைத்து இஸ்லாமிய பெருமக்களுக்கும் எனது உளம்கனிந்த
    மிலாது நபி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.