• மனிதவள மேம்பாட்டிற்கு இன்றியமையாததாக விளங்கும் கல்வியும் – செல்வமும் அனைவர் வாழ்விலும் செழித்தோங்கட்டும் - டாக்டர் பாரிவேந்தர் ஆயுதபூஜை – விஜயதசமி வாழ்த்து

    ஒவ்வொரு மனிதருக்கும் இன்றியமையாததாக விளங்கும்கல்வி – செல்வம் – வீரம் ஆகியவற்றிற்கு அதிதேவதைகளாகவிளங்கும் கலைமகள் – திருமகள் – மலைமகள் எனும் முப்பெரும் தேவியர்களைதூய்மையான உள்ளத்துடனும் – பக்தியுடனும் போற்றி வழிபடும் விழா விஜயதசமியாகவும் – நவராத்திரியாகவும் நாடு முழுவதும்  கொண்டாடப்படுகிறது.

     மனிதவள மேம்பாட்டிற்கும் – சமுதாய வளர்ச்சிக்கும் இன்றியமையாதது கல்விஅந்த கல்விக்கு அதிதேவதையான கலைமகளைப்  போற்றியும்,

     நாம் செய்யும் தொழில்கள் நம்மை வாழவைக்கும் என்பதற்காக  செல்வத்தின் அதிதேவதையான திருமகளைப் போற்றியும்,

     “தீயவற்றை நல்லவை வெற்றிகொள்ளும் எனும் தத்துவத்தினை விளக்கும் வீரத்தின் அதிதேவதையான மலைமகளைப் போற்றியும்இத்திருவிழாக்கள் நாடு முழுவதும் நவராத்திரி விழாவாகக் கொண்டாடப்படுகின்றது.

     இந்நாளில்அதர்மம் எனும் சூழ்ச்சி வலைகளை அறுத்தெறிந்துதர்மம் தழைத்தோங்க நாம் அனைவரும் பாடுபட வேண்டும் எனக்கூறி நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது உளம்கனிந்த சரஸ்வதி - ஆயுத பூஜை நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.