-
IJK கட்சி அலுவலகத்தில் மகாத்மா காந்தியடிகளின் திருஉருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது
அண்ணல் காந்தியடிகளின் 70-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி,இந்திய ஜனநாயக கட்சியின் சார்பில், கட்சி தலைமை அலுவலகத்தில் நிறுவனத் தலைவர் டாக்டர் பாரிவேந்தர் அவர்கள் மகாத்மா காந்தியின் திருஉருவபடத்திற்கு மாலையணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் கட்சியின் பொதுச்செயலாளர் பி.ஜெயசீலன், கொள்கை பரப்புச் செயலாளர் எம்.எஸ்.ராஜேந்திரன், மற்றும் வழக்கறிஞரணி துணைச் செயலாளர் கே.ஆர்.பாலாஜி, காஞ்சிபுரம் (தெ) மாவட்ட தலைவர் எஸ்.முத்தமிழ்செல்வன், சென்னை புறநகர் மாவட்ட தலைவர் எல்.ஹென்றி ஜேம்ஸ், தென்சென்னை மாவட்டச் செயலாளர் பிரபாகரன், காஞ்சிபுரம் (வ)மாவட்டச் செயலாளர் ராஜா, மத்திய சென்னை மாவட்ட பொருளாளர் தங்கவேலு, மேற்கு சென்னை மாவட்ட வேந்தர் பேரவை செயலாளர் பாண்டியராஜன், காஞ்சிரம் (தெ) மாவட்ட மகளிரணி செயலாளர் கவிதா திருநாவுக்கரசு, தென்சென்னை மாவட்ட மகளிரணி செயலாளர் எ.பி.லதா உள்ளிட்ட கட்சியின் நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்து கொண்டு காந்தியடிகளின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.