• மக்களிடம் வன்முறையும் – வறுமையும் நீங்கி வளர்ச்சி தழைத்தோங்கட்டும் - டாக்டர் பாரிவேந்தர் தீபாவளி வாழ்த்து

    இந்தியாவில் அனைத்து மக்களும் ஒருசேர இணைந்து ஒரே நாளில் மகிழ்ச்சியோடு கொண்டாடும் ஒரே பண்டிகை தீபாவளியாகும். 

    பண்டிகைகளின் நோக்கம் குடும்பத்தில் மகிழ்ச்சியும் – சமுதாயத்தில் சமத்துவமும், சகோதரத்துவமும் நீடித்து, மக்களிடம் வறுமையும், வன்முறையும் நீங்கி – ஒற்றுமை செழித்து அனைவரின் வாழ்விலும் வளர்ச்சி தழைத்தோங்க வேண்டும் என்பதுதான். 

    தீமையை அகற்றி – நன்மை விளைவிப்பதன் அறிகுறியாக விளக்கேற்றி வைக்கும் ஒளித்திருநாளான இத்தீபாவளி பண்டிகையில் பட்டாசு ஒலியிலும் – மத்தாப்பின் ஒளியிலும் மக்களின் வாழ்வு மலர்ந்து – மகிழ்ச்சி வெள்ளம் பெருக வேண்டுமெனக் கூறி, அனைவருக்கும் எனது உளம் கனிந்த தீபாவளி திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.