• டாக்டர் பாரிவேந்தர் அவர்களின் சுதந்திர தின நல்வாழ்த்து

    நாடு சுதந்திரம் அடைந்துவிட்டது என்பதனை ஒவ்வொரு ஆண்டும் விழாவாக கொண்டாடும் நாம், பெற்ற சுதந்திரத்தை பேணிக்காக்க ஜாதி – மத – இன பேதங்களை கடந்து “இந்தியன்” என்ற ஒற்றை சிந்தனையுடன் ஒருங்கிணைய வேண்டும்.

    தேசிய ஒருமைப்பாடு – சமுதாய நல்லிணக்கம், வேற்றுமையில் ஒற்றுமை போன்ற நற்பண்புகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வதுடன் - நாட்டில் வன்முறை, தீவிரவாதம், மதவாதம் ஒழியவும் – அனைத்து துறைகளிலும் இந்தியா வளர்ச்சி பெற்று வளங்கள் கொழிக்கவும் பாடுபட  இச் சுதந்திர தினத்தில் சபதம் ஏற்போம் எனக்கூறி, உலகெங்கும் வாழும் அனைத்து இந்தியர்களுக்கும் என்னுடைய உளம் கனிந்த சுதந்திர தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.