• உலகில் ஒற்றுமை தழைத்தோங்கி மதநல்லிணக்கம் வளர பாடுபடுவோம் - டாக்டர் பாரிவேந்தர் ரம்ஜான் வாழ்த்து

    புனித ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் அனைவரும் நோன்பிருந்து உடலையும் – உள்ளத்தையும் தூய்மைப்படுத்தி – எண்ணங்களை ஒருமுகப்படுத்தி மனித நேயத்துடன் ஏழைகளுக்கு உதவுவது இறைவணக்கத்திற்கு நிகரானதாகும்.
    அண்ணல் நபிகள்நாயகம் அவர்கள் உலக மக்களுக்கு போதித்த அன்பு – மனிதநேயம் – சமாதானம் – நல்லொழுக்கம் –பிறருக்கு உதவும் மாண்பு ஆகிய உயரிய நெறிமுறைகளை அனைவரும் ஏற்று – அதனை முழுமையாக கடைபிடித்து வாழவேண்டும்.
    நோன்பு ஏற்கும் மாண்பை – இம்மண்ணில் கடைபிடிக்கும் இஸ்லாமிய பெருமக்கள் ரம்ஜான் நன்னாளாக கொண்டாடுகின்றனர்இந்நன்னாளில் உலகில் ஒற்றுமை தழைத்தோங்கி மதநல்லிணக்கம் உருவாக அனைவரும் பாடுபடுவோம் எனக்கூறிஇஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த ரம்ஜான் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.